யாழ்ற்ரன் கல்லூரியில் கோலாகலமாக நடந்த பரிசளிப்பு விழா

யாழ்ற்ரன் கல்லூரியின் 2013ஆம் ஆண்டிற்கான பரிசுத்தினம் 08.10.2014 புதன்கிழமை மு.ப 9.00மணிக்கு  கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில்

 ஆரம்பமாகி நடைபெற்றது. பிரதமவிருந்தினராக கொழும்பு நிலஅளவைத்திணைக்கள சிரேஷ்ட நிலளவை அத்தியட்சகர்  yarltonian  திரு.சு.சிவாணந்தராஜா அவர்களும் கௌரவ விருந்தினராக இ.போ.ச கோண்டாவில் சாலை பொறியியல் பகுதி உதவி முகாமையாளர்  yarltonian  திரு தி. ஏகாம்பரநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். பரிசில் பெறும் மாணவர்களின்பெற்றோர்கள்,பழையமாணவர்கள்,சமூகப்பெரியோர்கள்,வர்த்தகப் பெருமக்கள் ஆகியோரும் மேலும் கலந்து சிறப்பித்தனர். 2013ற்கான அதிபர் அறிக்கை விருந்தினர் உரை மாணவர்களுக்கான பரிசில் வழங்கல்,தேசிய மட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பதக்கங்கள் அணிவித்தல் ஆகியவற்றுடன் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடனும் 2014ஆம் ஆண்டிற்குரிய சிறந்த அதிபருக்குரிய இலங்கை கல்வி அமைச்சினால் வழங்கப்படும் 'பிரதீபா பிரபா'விருது பெற்ற கல்லூரி அதிபர் திரு.வே .முருகமூர்த்தி அவர்கள்; பாரியார் சகிதம் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார். நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவேறியது. 

1