மரண அறிவித்தல், திருமதி இராசலட்சுமி தனபாலசிங்கம்

                                            மரண அறிவித்தல்

 

PHOTO

                    திருமதி இராசலட்சுமி தனபாலசிங்கம்

                                                                                 மறைவு :2014-10-06

காரைநகர் மாப்பாணவூரியைப் பிறப்பிடமாகவும் குறுக்கு வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசலட்சுமி தனபாலசிங்கம் (ஓய்வுபெற்ற கனிஷ்ட  முகாமையாளர், இலங்கை வங்கி, 2ஆம் கிளை, யாழ்ப்பாணம்.) நேற்று (06.10.2014) திங்கட்கிழமை காலமாகிவிட்டார். 

அன்னார் அருணாசலம் தனபாலசிங்கத்தின் (ஓய்வு பெற்ற ஆசிரியர், கொக்குவில் இந்துக் கல்லூரி) அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம்-சிவகொழுந்து தம்பதியரின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம்- இலட்சுமி தம்பதியரின் அன்பு மருமகளும், சுரேஷ்குமார் (பொறியியலாளர் USA), சுகன்யா (ஆசிரியை, யா/திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும், குகதர்சினி (USA), ரமணன் (முகாமைத்துவ உதவியாளர், வலி.தென்மேற்கு பிரதேசசபை, மானிப்பாய்) ஆகியோரின் அன்பு மாமியும், ரட்ணாங்கி, சுதன் (USA) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நாளை (09.10.2014) வியாழக்கிழமை காலை 8.00 மணியளவில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 
 
தகவல் : குடும்பத்தினர்.
 
தொடர்புகளுக்கு     
குடும்பத்தினர். – 82/2, குறுக்கு வீதி, நல்லுர்    , 0212225356, 0779071505

பேரின்பராஜா திருநாவுக்கரசு  905-472-9992