காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் ஓர் அங்கமாக வீதியோட்டம் மற்றும் பெண்களுக்கான சைக்கிலோட்ட நிகழ்வு இன்று (ஜன 26)ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.

வீதியோட்டப் போட்டியை பாடசாலையின் பகுதித் தலைவர் தெ.லிங்கேஸ்வரன் ஆரம்பித்து வைத்தார்.

 வீதியோட்டப் போட்டியில் முதல் ஜந்து இடங்களைப் பெற்ற மாணவர்களின் விபரம் வருமாறு.

 முதலாமிடம் செல்வன் சி.கோகுலன் (தரம் 11 – தியாகராசா இல்லம்), இரண்டாம் இடம் செல்வன் அ.அஜந்தன் (தரம் 11- சயம்பு இல்லம்), மூன்றாம் இடம் செல்வன் பா.பிரசாந்தன் (தரம் 11 -தியாகராசா இல்லம்),நான்காம் இடம் செல்வன் கோ.அஜித்குமார் (தரம் 11 -நடராசா இல்லம் ) ஜந்தாம் இடம் செல்வன் பே.அலக்சன் (தரம் 10 -சயம்பு இல்லம்)

 பெண்களுக்கான சைக்கிலோட்டப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளின் விபரம் வருமாறு

முதலாமிடம் செல்வி நா.விஜயகுமாரி (தரம் 11 பாரதி இல்லம்) இரண்டாம் இடம் செல்வி லோ.ஜோதிகா (தரம் 10 நடராசா இல்லம்) மூன்றாம் இடம் செல்வி செ.தேனுஜா (தரம் 11 பாரதி இல்லம்)

 வீதியோட்ட நிகழ்வையும்,வீதியோட்டப் போட்டியில் முதல் ஜந்து இடங்களைப் பெற்ற மாணவர்கள் மற்றும் பெண்களுக்கான சைக்கிலோட்டப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகள் பாடசாலை அதிபர் திருமதி வாசுகி தவபாலன்,விளையாட்டுப் பொறுப்பாசிரியை ஆகியோருடன் நிற்பதனையும் படங்களில் காணலாம்.