கோலாகலமாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் 2016 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டி

YARLTON COLLEGE LOGO

யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி 06.02.2016 சனிக்கிழமை பி.ப 1.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் கோலாகலமாக ஆரம்பமாகி நடைபெற்றது.

பிரதம விருந்தினராக வடக்கு மாகாண, மாகாணக் கல்வித் திணைக்களத்தின் நிர்வாகத்துக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.தி.தர்மலிங்கம் (YARLTONIAN) அவர்களும் சிறப்பு விருந்தினராக காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆ.குமரேசமூர்த்தி (YARLTONIAN) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக சிவகணேசன் புடைவையக உரிமையாளர் திரு.க.அருள்நேசன் (YARLTONIAN) அவர்களும், காரைநகர் இலங்கைவங்கி முகாமையாளர் திரு.ப.செல்வகுமார் அவர்களும் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் யாழ் மாவட்ட இணைப்பாளர் திரு.க.சிவபாலன் (YARLTONIAN) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கல்லூரியின் பான்ட் இசைக் குழு மற்றும் இன்னியம் குழு, மாணவத் தலைவர் குழு ஆகியோர் சகிதம் விருந்தினர்கள் அழைத்து வந்த காட்சியும் மாணவர்களின் அணிநடை மரியாதையும், இடைவேளையின் போது நடைபெற்ற மாணவிகளின் இசையும் அசையும் உடற் பயிற்சிக் கண்காட்சியும் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தமை குறிப்பிடத்தக்கது.

அதிபர் தனது உரையில்

        விளையாட்டுப் போட்டியின் அனுசரணையாளர் திரு.க.அருள்நேசன் (உரிமையாளர் சிவகணேசன் புடைவையகம்)

        கல்லூரியின் முதல் அதிபர் அமரர் கருணானந்தம் ஞாபகார்தமான வெற்றிக் கேடயங்கள் அளித்த திரு.அ.யோகராசா (சின்னாலடி காரைநகர்)

        மேலும் வெற்றிக் கேடயங்களைத் தந்துதவிய கல்லூரின் ஆசிரியர்கள் திருமதி.மனோரஞ்சிதமலர் இராதாகிருஸ்ணன்,திருமதி கவிதா பிரதீஸ்வரன்

        சைக்கிள் ஓட்டப் போட்டியில்(பெண்கள்) முதல் 5 இடங்களுக்கும் பரிசுப் பொருள் வழங்கிய திரு.சண்முகம் குகதாசன் (வர்த்தகர் கருங்காலி)

        சைக்கிள் ஓட்டப் போட்டியில்(ஆண்கள்) முதல் 5 இடங்களுக்கும் பரிசுப் பொருள் வழங்கிய திரு.S.நிமலன் (கருங்காலி)

        அமரர் செல்லப்பா வேலுப்பிள்ளை ஞாபகார்த்தமாக வெற்றிக் கேடயங்களை வழங்கிய திரு.வே.சிற்சபேசன் (சின்னாலடி)

        பரிசுப் பொருட்களை வழங்கிய திரு.சி.தயாளன் (சின்னாலடி)

 

ஆகியோர்களுக்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.