மேற்படி போட்டிகள் கல்லூரி மைதானத்தில் 01.02.2016 திங்கட்கிழமை அன்று பி.ப. 1.00 மணிக்கு ஆரம்பமாகி கல்லூரி அதிபர் திரு. வே.முருகமூர்த்தி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
பிரதம விருந்தினராக தீவக கல்வி வலயத்தின் ஓய்வு நிலை கல்விப் பணிப்பாளர்(ஆரம்பக் கல்விப் பிரிவு) திரு.வி.தனிநாயகம் அவர்களும், சிறப்பு விருந்தினராக ஓய்வு நிலை கிராம சேவகர் திரு.தி.சண்முகசுந்தரம் அவர்களும் கலந்த சிறப்பித்தனர்.
அதிபர் தனது உரையில் இவ் ஆரம்பப் பிரிவு விளையாட்டுப் போட்டிக்கு அனுசரணையாளராக செயற்பட்டு வரும் யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி கணேசன் புடவையக உரிமையாளர் திரு.க.சிவநேசன் அவர்களுக்கு தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.