யாழ்ற்ரன் கல்லூரியின் 2016 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான சைக்கிள் ஓட்டப்போட்டிகள் 20.01.2016 புதன்கிழமை காலை 6.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி, கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திரு.வே.சிற்சபேசன், கல்லூரியின் பழைய மாணவரும் விளையாட்டுத்துறை ஆர்வலருமான திரு.ச.குகதாசன் ஆகியோரால் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கல்லூரி முன்றலில் ஆரம்ப்பித்து சுற்று வீதி வழியாக மீண்டும் கல்லூரி முன்றலில் முடிவடைந்தது. முதலில் ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டிகளும் பின் பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டிகளும் நடைபெற்றன.
போட்டிகள் முடிவடைய நடுவர்களுக்காக நடைபெற்ற தேனீர் விருந்தில் நடுவர்களாக வந்து ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நடுவர்களுக்கும், அம்புலன்ஸ் சேவையை வழங்கிய காரைநகர் வைத்தியசாலை வைத்திய அதிகாரிக்கும் அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
சைக்கிள் ஓட்டம் ஆண்கள்
1ம் இடம் செ.நிறோசன் நாவலர் இல்லம்
2ம் இடம் ப.தவக்குமார் நாவலர் இல்லம்
3ம் இடம் ந.சரவணபவன் விபுலானந்தர் இல்லம்
4ம் இடம் கி.அஜந்தன் நாவலர் இல்லம்
5ம் இடம் சூ.சஞ்ஜீவன் நாவலர் இல்லம்
சைக்கிள் ஓட்டம் பெண்கள்
1ம் இடம் மோ.றோசி நாவலர் இல்லம்
2ம் இடம் சௌ.நிரோஜமலர் நாவலர் இல்லம்
3ம் இடம் சி.பிரியங்கா இராமநாதன் இல்லம்
4ம் இடம் ம.பவித்திரா இராமநாதன் இல்லம்
5ம் இடம் க.காயத்திரி நாவலர் இல்லம்