கனடா- காரை கலாசார மன்றம் பொதுக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாக சபை தெரிவு பற்றிய அறிவித்தல்!

CKCA LOGO (Copy)

கனடா-காரை கலாசார மன்றத்தின் ஈராண்டு பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் 10.05.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு Scarborough Civic Centre  மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கனடா-காரை கலாசார மன்றத்தின் யாப்பு விதிகளுக்கமைய தற்போதைய நிர்வாக சபையினரால் யாப்பு திருத்தம் தொடர்பான பணிகள் இடம்பெற்று வருவதாலும், காரைநகர் ஆரம்ப பாடசாலைகளிற்கான 10 இலட்சம் ரூபா நிரந்தர வைப்பு திட்டத்திற்கான நிதி சேகரிப்பு பூர்த்தியாத காரணத்தினாலும் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் இவ்வருட தொடக்கத்தில் நடாத்த முடியவில்லை.

தற்போதைய நிர்வாக சபையினருக்கும் போஷகர் சபையினருக்கும் இடையே இது பற்றிய புரிந்துணர்வின் அடிப்படையில் தற்போதைய நிர்வாக சபையினாரால் 2014ம் ஆண்டு காரைநகர் பாடசாலைகள் அனைத்திற்கும் பாரியளவில் நிதி வழங்கப்பட்டு பலவித செயற்பாடுகள் நிறைவேற்றப்பட்டுள்ள காரணத்தினால் அச்செயற்பாடுகளின் பலாபலன்கள் மற்றும் நிதி அறிக்கை என்பவற்றை பெற்றுக்கொள்வதில் காலதாமதம் ஏற்பட்ட காரணத்தினாலும் வருட ஆரம்பத்தில் நடைபெறவேண்டிய பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் காலதாமதம் ஆகியுள்ளது.

கனடா-காரை கலாசார மன்றத்தின் அங்கத்தவர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவருக்கும் பொதுக்கூட்டத்திற்கான அழைப்பும், தற்போதைய நிர்வாக சபையினரின் செயற்பாட்டு அறிக்கை மற்றும் நிதி அறிக்கை என்பனவும் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.

புதிய நிர்வாக சபை தெரிவிற்கான நடைமுறை மற்றும் விளக்கம் என்பனவும் போஷகர் சபையின் சார்பாக வெளியிடப்படும்.

மேலதிக தகவல்கள் மற்றும் தொடர்புகளுக்கு: கனடா-காரை கலாசார மன்றம் 416 642 4912