Category: திருவிழாப் படங்கள்
காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலய தேர்த்திருவிழா காட்சிகள்!
காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலய மாசி மக பெருவிழாவின் தேர்த்திருவிழாவில் 10.03.2017 வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் நூற்றுக்கணக்கான பத்தர்களின் அரோகராக் கோசம் வானைப்பிளக்க வர்ணபகவான் மழை பொழிய அம்பாள் தேரிலே வலம்வந்து அடியார்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.
அம்பாளுக்கு புதிய சித்திரத்தேரினையும் தொடர்ந்து புதிய தேர் முட்டியையும் பல மில்லியன் ரூபா செலவில் அமைத்துக் கொடுத்த தேர்த் திருவிழா உபயகாரரான சண்முகம் சிவஞானம் அவர்களுக்கு 'காரை பாரிவள்ளல்' பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
காரைநகர் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் மகோற்சவத்தின் மூன்றாம் திருவிழாவான 03.02.2017 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பகல்,இரவுத் திருவிழாக் காட்சிகள்.
காரைநகர் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் மகோற்சவத்தின் மூன்றாம் திருவிழாவான 03.02.2017 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பகல்,இரவுத் திருவிழாக் காட்சிகள்.
கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மகோற்சவத்தின் தேர்த் திருவிழா எதிர்வரும் 9ம் திகதி வியாழக்கிழமையும் தீர்த்தத் திருவிழா மறுநாள் வெள்ளிக்கிழமையும் இடம்பெற உள்ளது.
காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழாவின் பஞ்சரத பவனி 10.01.2017 செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பத்தர்களின் அரோகராக் கோசமும் பெருந்திரளான தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் நாதகான மழையும் முளங்க பத்திபூர்வமாக இடம்பெற்றது.
காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழாவின் பஞ்சரத பவனி 10.01.2017 செவ்வாய்க்கிழமை ஆயிரக்கணக்கான பத்தர்களின் அரோகராக் கோசமும் பெருந்திரளான தவில் நாதஸ்வரக் கலைஞர்களின் நாதகான மழையும் முளங்க பத்திபூர்வமாக இடம்பெற்றது.
காலை 6.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசையும் தொடர்ந்து திருவெம்பாவை ஓதலும் இடம்பெற்று காலை 9.00 மணிக்கு நடேசப் பெருமான் தனது பரிவாரமூர்திகளுடன் பஞ்சரதங்களில் எழுந்தருளி பத்தர்களுக்குக் காட்சி கொடுத்தார்.
காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழா 10.01.2017 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்த் திருவிழா காட்சிகள்
காட்சிகளை பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.
http://www.karainagar.com/pages/part-1
நாளை ஆரம்பமாக உள்ள மணிவாசகர் விழாவினை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை மாலை காரைநகர் சடையாளி ஞானவைரவர் ஆலயத்திலிருந்து மணிவாசகப் பெருமானின் திருவுருவப் படம் ஊர்வலமாக ஈழத்துச் சிதம்பரத்திற்கு மணிவாசகர் சபையினரால் எடுத்துச் செல்லப்பட்டது.
நாளை ஆரம்பமாக உள்ள மணிவாசகர் விழாவினை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை மாலை காரைநகர் சடையாளி ஞானவைரவர் ஆலயத்திலிருந்து மணிவாசகப் பெருமானின் திருவுருவப் படம் ஊர்வலமாக ஈழத்துச் சிதம்பரத்திற்கு மணிவாசகர் சபையினரால் எடுத்துச் செல்லப்பட்டது.
சபையின் காப்பாளரும் முன்னைநாள் தலைவருமான கலாபூசணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்களினால் தொடக்கிவைக்கப்பட்ட இந்த ஊர்வலத்தில் பாடசாலை மாணவர்கள்,சபை உறுப்பினர்கள்,அடியார்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர். வீதிகள் தோறும் மக்கள் நிறைகுடம் வைத்து மணிவாசகப் பெருமானை வரவேற்றனர்.பேரெழுச்சியாக இடம்பெற்ற ஊர்வலத்தையடுத்து இன்று தொடக்கம் ஜந்து தினங்கள் ஈழத்துச் சிதம்பரத்தில் இடம்பெற உள்ள விழாவில் ஈழத்து,தமிழக அறிஞர்களின் சொற்பொழிவுகள் இடம்பெற உள்ளதால் அடியார்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன் பெறுமாறு சபையின் செயலர் பா.இராமகிருஸ்ணன் கேட்டுள்ளார்.
காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழா இன்று திங்கட்கிழமை பல நூற்றுக்கணக்கான பத்தர்களின் அரோகராக் கோசத்துடன் பத்திபூர்வமாக ஆரம்பமானது.
காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை உற்சவப்பெருவிழா இன்று திங்கட்கிழமை பல நூற்றுக்கணக்கான பத்தர்களின் அரோகராக் கோசத்துடன் பத்திபூர்வமாக ஆரம்பமானது.
இந்த உற்சவம் தொடர்ந்து பத்துத் தினங்கள் சிறப்பாக இடம்பெற உள்ளது.இந்த உற்சவத்தில் எதிர்வரும் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை பஞ்சரத பவனியும் மறுநாள் புதன் கிழமை அதிகாலை 2.00 மணி முதல் நடேசப் பெருமானுக்கு ஆருத்திரா அபிஷேகமும் அதிகாலை 5.30 மணிக்கு ஆருத்திரா தரிசனமும் இடம்பெற்று மாலை 3.30 மணிக்கு திருவூடல் உற்சவமும் தொடர்ந்து தீர்த்த உற்சவமும் இடம்பெற உள்ளது.