Category: திருவிழாப் படங்கள்
காரைநகர் சிவன் கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29.03.2015) இடம்பெற்ற ஜந்தாம் நாள் திருவிழா பகல் காட்சிகள்.
ஆலயத்திற்கு வருகைதந்த திருவெண்ணாமலை திருப்பனந்தாள் ஆதீன சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்ததுடன் மாணிக்கவாசகர் மடாலயத்திற்கு எழுந்தருளி மகேஸ்வர பூசையில் கலந்துகொண்டதுடன் அடியார்களுக்கும் அருளாசி வழங்கி ஈழத்துச் சிதம்பரத்தில் தாம் கண்ட பெருமைகளையும் எடுத்துக்கூறினார்.இங்கு அமைக்கப்பட்டுள்ள நடராஜரின் 108 தாண்டவங்கள் வேறு எங்கும் இல்லாதவாறு அற்புதமாக அமைக்கப்பட்டள்ளதுடன்,நடராஜர் திருவுருவமும் மிகவும் அற்புதமாக உள்ளது என்றார்.
ஈழத்துச் சிதம்பர மகேஸ்வரன் அறப்பணி நிலையம்,மாணிக்கவாசகர் மடாலயம் என்பவற்றில் அன்னதானமும் தினமும் சிறப்பாக வழங்கப்பட்டு வருகின்றது.
காரைநகர் ஈழத்துச் சிதம்பர வருடாந்த பெருந்திருவிழா இன்று 25ம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து பதினொரு தினங்கள் சிறப்பாக இடம்பெற உள்ளது.
இந்த உற்சவத்தில் மார்ச் 28ம் திகதி சனிக்கிழமை இரவு 8.00மணிக்கு கைலாய வாகனத் திருவிழாவும், மார்ச் 31ம் திகதி இரவு 8.00 மணிக்கு வேட்டைத்திருவிழாவும் ஏப்ரல் 1ம் திகதி இரவு 8.00மணிக்கு சப்பரத்திருவிழாவும்,
2ம் திகதி வியாழக்கிழமை காலை 8.00 மணிக்குத் தேர்த்திருவிழாவும் மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு நடேசர் உற்சவமும் காலை 9.00 மணிக்கு தீர்த்தோற்சவமும் இரவு 7.00 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் இடம்பெறும்
உற்சவ காலங்களில் தினமும் அன்னதானம் வழங்கப்பட உள்ளதுடன் யாழ்நகரிலிருந்து ஆலயம் வரை நேரடி பஸ்சேவைகளும் இடம்பெற உள்ளது.
இன்றைய இரவுத் திருவிழாக் காட்சிகள்
காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 48வது நாள் மண்டல பூா்த்தி விழா பகல் நிகழ்வுகளும், யாழ்ற்ரன் கல்லூரி அலங்கார வளைவு திறப்புவிழா வைபவமும்
காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 48வது நாள் மண்டல பூா்த்தி விழா 21.02.2015 சனிக்கிழமை வெகு விமரிசையாக பக்தி பூா்வமாக1008 கலசாபிஷேகம் மூலஸ்தான அம்பாளுக்கும்,1008 சங்காபிஷேகம் எழுந்தருளி அம்பாளுக்கும் வடஇலங்கை பிரபல நாதஸ்வர தவில் வித்துவான்கள் நாதஸ்வரகான மழை பொழிய பெரும்திரளான பக்தா்களின் அரோகரா கோஷத்துடன் நடந்தேறியது.
மண்டல பூா்த்தி விழாவின் உபயகாரா் தெய்வீகதிருப்பணிஅரசு திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் என்பது குறிப்பிடத்தக்கது .தொடா்ந்து மாலை 3.30 மணிக்கு ஆலயத்தின் கிழக்குப்புறமாக உள்ள திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவா்களின் நிலத்தில் கலை, கலாச்சார வகுப்புக்களை நடாத்துவதற்கான மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.இம்மண்டபத்திற்கான அனுசரணையாளா் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடா்ந்து 4.30 மணிக்கு திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவா்களால் யாழ்ற்ரன் கல்லூரிக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட பிரதான நுழைவாயில் அலங்கார வளைவும், துவிச்சக்கரவண்டி பாதுகாப்புக் கொட்டகையும் ஆலய முன்றலிலிருந்து பாடசாலை மாணவா்களின் பான்ட் வாத்தியத்துடன் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் பிரதேசசபை உறுப்பினா் திரு.கணேசபிள்ளை பாலச்சந்திரன் உட்பட பிரமுகா்கள் அழைத்துச்செல்லப்பட்டு திறப்புவிழா கோலாகலமாக நடைபெற்றது. இவ் வைபவத்தில் தனது மகளின் பிறந்ததின நினைவாக வசதி குறைந்த திறமையான 18 மாணவா்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை அன்பளிப்புச் செய்தார்.
காரைநகர் மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 25ம் நாள் மண்டலாபிஷேக நிகழ்வு 26.02.2015 நடைபெற்றது.
காரைநகர் மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 25ம் நாள் மண்டலாபிஷேக நிகழ்வு 26.02.2015 நடைபெற்றது. இந்நிகழ்வில் மீள்குடியேற்ற இந்துசமய விவகார அமைச்சா் திரு.டி.எம்.சுவாமிநாதன் அவா்கள் கலந்து கொண்டார் தொழிலதிபா் எஸ்.ரி.பரமேஸ்வரன் உபயமாக நடைபெற்ற இந்நிகழ்வில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள 50 மாணவா்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் குதிரையாட்டம், கரகம், விசேட மேளக்கச்சேரி என்பன நடைபெற்றது
காரைநகர் நீலிப்பந்தனை அருள்மிகு ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான பாலஸ்தாபன கும்பாபிஷேகம் (11.02.2015 ) நேற்று புதன்கிழமை காலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரையுள்ள சுபவேளையில் நடைபெற்றது.
காரைநகர் நீலிப்பந்தனை அருள்மிகு ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான பாலஸ்தாபன கும்பாபிஷேகம் (11.02.2015 ) நேற்று புதன்கிழமை காலை 6.30 மணிமுதல் 7.30 மணிவரையுள்ள சுபவேளையில் நடைபெற்றது.
ஆரம்பக் கிரியைகள் 09.02.2015 திங்கட்கிழமை ஆரம்பமாகின பாலஸ்தாபனத்தையடுத்து அம்பிகையின் ஆலயம் அழகுற அமைத்து விரைவில் மகா கும்பாபிஷேகம் இடம்பெற உள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்கு காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்திலிருந்து பாற்குடப்பவனி இடம்பெற்றது.
இந்தப் பாற்குடப் பவனியில் விசேடமாக யானை கும்பாபிஷேகத்திற்குரிய பொருட்களைச் சுமந்துவர பெருமளவு தவில் நாதஸ்வர வித்துவான்கள் நாதமழை பொழிய நூற்றுக்கணக்கான பெண்களின் பாற்குடப் பவணி இடம்பெற்றதுஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாற்குடப்பவனியில் பங்குபற்றினர்.