![](https://i0.wp.com/karainagar.com/pages/wp-content/uploads/2015/06/DSC03317-Copy.jpg?fit=645%2C484&ssl=1)
Category: திருவிழாப் படங்கள்
காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் மூன்றாம் திருவிழா இரவுக் காட்சிகள்.
![](https://i0.wp.com/karainagar.com/pages/wp-content/uploads/2015/06/DSC02838-Copy.jpg?fit=645%2C860&ssl=1)
மகோற்சவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து பத்துத் தினங்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
இந்த உற்சவத்தில் எதிர்வரும் 8ம் திகதி திங்கட்கிழமை தேர்த்திருவிழாவும் மறுநாள் செவ்வாய்க்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெற உள்ளது.
காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டு தினமான இன்று செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது.
விநாயகப்பெருமான் தேருக்கு எழுந்தருளுவதனையும் தேரில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருட்காட்சி வழங்குவதனையும் படங்களில் காணலாம்.
காரைநகர் சிவன் கோவில் இன்று வியாழக்கிழமை (02.04.2015) இடம்பெற்ற தேர்த்திருவிழாக் காட்சிகள்.
பல நூற்றுக்கணக்கான அடியவர்களின் அரோகராக் கோசத்துடன் சோமாஸ்கந்தப் பெருமான் தனது பரிவாரமூர்த்திகளுடன் மாமணிவீதியாம் மூன்றாம் வீதியில் தேரில் உலாவந்து அடியார்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.
நடராஜப்பெருமானது புதிய சிற்பத்தேர் திருத்தவேலை காரணமாக இம்முறை ஓடாத காரணத்தால் சோமாஸ்கந்தர் அம்பாளின் தேரிலே வலம்வந்தமை குறிப்பிடத்தக்கது.
காரைநகர் சிவன் கோவிலில் இன்று புதன்கிழமை (01.04.2015) இடம்பெற்ற எட்டாம் நாள் சப்பறத்திருவிழாக் காட்சிகள்.
பெருந்திரளான பத்தர்கள் மத்தியில் வாணவேடிக்கைகள் முழங்க மூன்றாம் வீதியில் சுந்தரேஸ்வரப்பெருமான் தனத பரிவாரமூர்த்திகளுடன் சப்பறத்தில் உலா வந்தது அடியார்களுக்கு அருட்காட்சி வழங்கினார்
.இரவு 7.00 மணிக்கு ஆரம்பமான வசந்தமண்டபப் பூசையையடுத்து இரவு 8.00 மணிக்கு சப்பறத்தில் ஆரோகனித்த சுந்தரேஸ்வரர் இரவு 11.00 மணியனவில் தனது இருப்பிடம் வந்தார்.
திண்ணபுரத்தில் விநாயகருக்கு புதிய சித்திரத்தேர் வெள்ளோட்டம் வருணபகவானின் ஆசியுடன் இனிதே இன்று இடம்பெற்றது.
காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் விநாயகப் பெருமானுக்காக அமைக்கப்பட்ட புதிய சித்திரத்தேர் வெள்ளோட்ட விழா இன்று புதன்கிழமை காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.
பஞ்சரதங்கள் பவனிவரும் இவ்வாலயத்தில் விநாயகப்பெருமானுக்காக புதிய சித்திரத்தேர் அமைக்கப்பட்டு.இந்தத் தேரின் வெள்ளோட்ட விழா இன்று இடம்பெற்று 10.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை உள்ள சுபவேளையில் இரதப்பிரதிஸ்டையும் இடம்பெற்றது.
சுட்டெரிக்கும் வெய்யிலில் ஆரம்பமானது தேர்வெள்ளோட்டம் ஆனால் வானத்துத் தேவர்கள் தேரின் அழகிழனயும் வெள்ளோட்டச் சிறப்பினையும் கண்டு உடனடியாகவே வருணபகவானை அனுப்பிவைத்தனர்.
ஏங்கிருந்தோ வந்த முகில்கள் மழையாகப் பொழிய மாமணி வீதியாம் மூன்றாம் வீதியில் தேர் உலா வந்த காட்சி பத்தர்களைப் பத்திப் பரவசமாக்கியதுடன் வெப்பமும் தனிந்து இப்பிரதேசமெங்கும் குளிர்மையாகியது.
நாளை வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு இடம்பெறும் வசந்தமண்டபப் பூசையையடுத்து பஞ்சரத பவனியும் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு தீர்த்தோற்சவமும் மறுநாள் சனிக்கிழமை திருக்கல்யான உற்சவமும் இடம்பெற உள்ளது.