Category: ஆலயங்கள்
Temples
காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனை அருள் மிகு ஸ்ரீ கற்பகவிக்னேஸ்வரசுவாமி கோவில் (கிழக்கு றோட் தெருவடிப் பிள்ளையார் ) விளம்பி வருஷம் 2018
விக்னேஸ்வர அடியார்களே!
காரைநகர் என்னும் சிவபூமியில் கரப்பிட்டியந்தனை பகுதியில் கோவில் கொண்டு எழுந்த அருள் புரியும் ஸ்ரீ கற்பகவிக்னேஸ்வர பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவம் நிகழும் மங்களகரமான விளம்பி வருஷம் ஆவணி திங்கள் 17ம் நாள் 02/09/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து 13 தினங்கள் உற்சவம் நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.இரவு 8.30 மணிக்கு வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து விசேட மங்கள வாத்தியங்களுடன் எம்பெருமான் மின்சார தீபங்களினால் அலங்கரிக்கப்பட்ட அழகிய சாத்துப்படி அலங்காரத்துடன் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும் எம்பெருமான் அடியார்கள் அனைவரும் ஆசாரசீலர்களாக வருகை தந்து எம் பெருமானின் இஷ்ரசித்திகளை பெற்றுஉய்யும் வண்ணம் அழைக்கின்றனர்.
காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 21/08/2018 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மணவாள கோல கும்பாபிஷேக தினம்!
காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 21/08/2018 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மணவாள கோல கும்பாபிஷேக தினம் காலை 9.00 மணிக்கு மூல மூர்த்திக்கு சங்காபிஷேகமும் பரிபாலன மூர்த்திகளுக்கு அபிஷேகமும் அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வும் இடம் பெற்றன.மாலை விசேட பயனை நிகழ்வும் அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜையும் மற்றும் விநாயகப்பெருமானுக்கு பொன்னூஞ்சல் பாடல் பாடப்பட்டு விநாயகப்பெருமான் வீதியுலா வரும் காட்சியும் ஆலய அறநெறி மாணவர்களுக்கு பிரபல வர்த்தகர் அமரர் சதாசிவம் நவரத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாக பரிசில்களும் வழங்கப்பட்டன.
ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் முன்றாம் நாள் பகல் திருவிழா கானமழையில் நனைந்தது.
ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் முன்றாம் நாள் பகல் திருவிழா கானமழையில் நனைந்தது.
இயற்கை எழில் நிறைந்துள்ள செல்வம் கொழிக்கும் திருநாடாம் சுவிற்சர்லாந்து Zürich மாநகரில் Dürnten எனும் புனித பதியில் வீற்றிருந்து வேண்டியவர்களுக்கு விரும்பும் வரங்களை வழங்கிக் கொண்டிருக்கும் மாங்கல்யதாரணி லோகரட்ஷகி தோஷநிவாரணி ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய விளம்பி வருஷ மகோற்ஸவ விஞ்ஞாபனத்தின் மூன்றாம் நாள் பகல் திருவிழா 15.07.2018 ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் வாழ் காரைநகர் அம்மன் அடியார்களால் வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.
காரை மண்ணின் கலைஞரும், கைலாயக் கம்பர் அவர்களின் பேரனும், நம் மண்ணின் புகழ் பூத்த தவில் வித்துவான் வீராச்சாமி அவர்களின் மகனுமான கண்ணன், கரன், வட்டுக்கோட்டை தர்ஷ்சன், சுவிற்சர்லாந்து பாலச்சந்திரன் குழுவினரின் தவில், நாதஸ்வரக் கச்சேரி ஒரு மணிநேரம் இடம் பெற்றது. ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் பக்தர்கள் கானமழையில் நனையும் வண்ணம் மிக அற்புதமாக இசையமுது வழங்கியிருந்தார்கள்.
எமது கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ.த.சரஹணபவானந்தகுருக்கள் அவர்கள் தவில், நாதஸ்வரக் கலைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவமளித்திருந்தார் என்பதும், இவ் முன்றாம் திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக காரை மண்ணின் கலைஞரும், கைலாயக் கம்பர் அவர்களின் பேரனும், நம் மண்ணின் புகழ் பூத்த தவில் வித்துவான் வீராச்சாமி அவர்களின் மகனுமான கண்ணன், கரன், குழுவினர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தின் முன்றாம்நாள் பகல் திருவிழாவிற்கு தங்களால் இயன்ற காணிக்கை செலுத்திய சுவிஸ் வாழ் காரைநகர் அம்மன் அடியார்கள் அனைவருக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நிழற்படங்களை கிழேகாணலாம்.
அன்பே அருளே சந்தோஷி
இங்ஙனம்
சுவிஸ் வாழ் காரை
ஸ்ரீ விஷ்ணு துர்க்கா பக்தர்கள்.
16.07.2018