காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனை அருள் மிகு ஸ்ரீ கற்பகவிக்னேஸ்வரசுவாமி கோவில் (கிழக்கு றோட் தெருவடிப் பிள்ளையார் ) விளம்பி வருஷம் 2018

விக்னேஸ்வர அடியார்களே!
காரைநகர் என்னும் சிவபூமியில் கரப்பிட்டியந்தனை பகுதியில் கோவில் கொண்டு எழுந்த அருள் புரியும் ஸ்ரீ கற்பகவிக்னேஸ்வர பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவம் நிகழும் மங்களகரமான விளம்பி வருஷம் ஆவணி திங்கள் 17ம் நாள் 02/09/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து 13 தினங்கள் உற்சவம் நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.இரவு 8.30 மணிக்கு வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து விசேட மங்கள வாத்தியங்களுடன் எம்பெருமான் மின்சார தீபங்களினால் அலங்கரிக்கப்பட்ட அழகிய சாத்துப்படி அலங்காரத்துடன் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும் எம்பெருமான் அடியார்கள் அனைவரும் ஆசாரசீலர்களாக வருகை தந்து எம் பெருமானின் இஷ்ரசித்திகளை பெற்றுஉய்யும் வண்ணம் அழைக்கின்றனர்.