Category: ஆலயங்கள்
Temples
காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் யோகர் வளாகத் திறப்பு விழா 18.12.2018 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது!
காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் யோகர் வளாகத் திறப்பு விழா 18.12.2018 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.
ஈழத்துச் சிதம்பர மேற்படி வளாகம் ஆலய ஆதீனகர்த்தாக்களின் ஆசியுடன் ஆலய பிரதமகுரு ஆசியுடனும் ஒரு வளாகம் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் (சுவிஸ் நாதன்) அவர்களாலும் மற்றைய வளாகம் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி ப.நந்தகுமார் அவர்களாலும் திறந்து வைக்கப்பட்டது.
காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் 18.12.2018 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற திருவாதிரை 5ம் நாள் திருவிழா காட்சிகள்! (புதிது)
எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்வையிட கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.
காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் 19/10/2018 வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்ற வன்னி மர வாழை வெட்டு (மானம்பூ) திருவிழா.
காரைநகர் களபூமி திக்கரை முருகன் ஆலயத்தில் 19/10/2018 வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்ற வன்னி மர வாழை வெட்டு அதாவது மானம்பூ திருவிழா நிகழ்வுக்கு பாலாவோடை குறிஞ்சாக்குளி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இருந்து எம்பெருமாள் மதியம் 12:30 மணியளவில் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு பாலாவோடை பிரதான வீதி ஊடாக பொன்னாவளை வீதி வழியாக திக்கரை முருகப்பெருமான் ஆலயத்தில் வன்னி மர வாழை வெட்டு அதாவது மானம்பூ திருவிழாவினை நிகழ்த்திவிட்டு மீண்டும் வளுப்போடை வீதி வழியாக ஆலயத்தை வந்தடைந்த காட்சிகள்.
காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனை ஸ்ரீ விக்னேஸ்வர ( தெருவடிப்பிள்ளையார்) ஆலய வருடாந்த உற்சவத்தின் 14ம் நாள் 14/09/2018 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற பூங்காவனத் திருவிழா.
காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனை ஸ்ரீ விக்னேஸ்வர ( தெருவடிப்பிள்ளையார்)ஆலய வருடாந்த உற்சவத்தின் 14ம் நாள் கரப்பிட்டியந்தனை இளைஞர்களின் பூங்காவனத் திருவிழா 14/09/2018 வெள்ளிக்கிழமை அன்று காலை10.00 மணிக்கு விசேட அபிஷேக தீபாராதனையும் அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வும்.மாலை 6.30 மணிக்கு அறநெறி மாணவர்களின் பஜனை நிகழ்வும் அதனை தொடர்ந்து களபூமி கலையக மாணவர்களின் கலை நிகழ்வும் சங்கீத ஆசிரியரின் பண்ணிசை நிகழ்வும் கலைஞான சுடர் தர்மலிங்கம் ஐயாவின் பக்தி பாடல்களும் மற்றும் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன. சிவகுமார் குழுவினர்கள் விசேட தவில் இசைக்கசேரியும் அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜையும் விநாயகப்பெருமான் அழகிய மின்சார தீபங்களினால் அலங்கரிக்கப்பட்ட பூந்தண்டிகையில் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெற்றன.
காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 13/09/2018 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற ஆவணி விநாயகர் சதுர்த்தி உற்சவம்.
காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 13/09/2018 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற ஆவணி விநாயகர் சதுர்த்தி உற்சவத்தில் காலை7.00 மணிக்கு பொங்கல் நிகழ்வினை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகளும் விநாயகப்பெருமானுக்கு பிடித்த மோதகம் ,வடை மற்றும் பல இனிப்பு பண்டங்களினால் படையல் படைக்கப்பட்டு மாலை6.30 மணிக்கு அறநெறி மாணவர்களின் பஜனையினை தொடர்ந்து வசந்தமண்டப பூஜையும் தன்னை சித்தி விநாயகப்பெருமானின் அறநெறி மாணவர்களும் சக்தி மேம்பாட்டு கழக மாணவர்களும் இணைந்து வழங்கிய கலைநிகழ்வுகளும் மற்றும் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டு எம்பெருமான் வீதியை வரும் காட்சியும் இடம்பெற்றன.