காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனை ஸ்ரீ விக்னேஸ்வர ( தெருவடிப்பிள்ளையார்) ஆலய வருடாந்த உற்சவத்தின் 14ம் நாள் 14/09/2018 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற பூங்காவனத் திருவிழா.

காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனை ஸ்ரீ விக்னேஸ்வர ( தெருவடிப்பிள்ளையார்)ஆலய வருடாந்த உற்சவத்தின் 14ம் நாள் கரப்பிட்டியந்தனை இளைஞர்களின் பூங்காவனத் திருவிழா 14/09/2018 வெள்ளிக்கிழமை அன்று காலை10.00 மணிக்கு விசேட அபிஷேக தீபாராதனையும் அதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வும்.மாலை 6.30 மணிக்கு அறநெறி மாணவர்களின் பஜனை நிகழ்வும் அதனை தொடர்ந்து களபூமி கலையக மாணவர்களின் கலை நிகழ்வும் சங்கீத ஆசிரியரின் பண்ணிசை நிகழ்வும் கலைஞான சுடர் தர்மலிங்கம் ஐயாவின் பக்தி பாடல்களும் மற்றும் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன. சிவகுமார் குழுவினர்கள் விசேட தவில் இசைக்கசேரியும் அதனை தொடர்ந்து வசந்த மண்டப பூஜையும் விநாயகப்பெருமான் அழகிய மின்சார தீபங்களினால் அலங்கரிக்கப்பட்ட பூந்தண்டிகையில் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெற்றன.