60 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட காரைநகர் பிரதேச செயலக புதிய கட்டடத்திறப்பு விழா 18.09.2013 புதன்கிழமை நடைபெற்றது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ண பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார்.
காரைநகர் பிரதேச செயலர் திருமதி பாபு தேவநந்தினி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள் அரச உயர் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.