காரைநகர் கடற்கோட்டை மக்கள் பார்வைக்கு!

காரைநகர் கடற்கோட்டை மக்கள் பார்வைக்கு!
காரைநகர் கடற்கோட்டையை மக்கள் பார்வைக்காக கடற்படையினர் அனுமதித்துள்ளனர். புராதன சின்னமாக விளங்கும் இக்கோட்டையை உல்லாசப் பயணிகளை கவரத்தக்கவகையில் அழகுபடுத்தியுள்ளனர்.

கடற்படைத்தளத்திற்கு முன்பாக அதாவது கடற்கோட்டைக்கு செல்லும் கடற்கரைப்பகுதியில் உயர்ரக தரத்திலான உல்லாச உணவு விடுதியும் அமைத்துள்ளனர். அத்துடன் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு மிகவும் அழகுபடுத்தியுள்ளனர். கடற்கோட்டையில் புராதன சிறைச்சாலைகள் பழமை பேணப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளதுடன் இயற்கை எழிலுடன்கூடிய மொட்டை மாடிகள் அமைக்கப்பட்டு உல்லாசபயணிகள் கவரத்தக்க இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாருங்கள் கோட்டையைப்பாருங்கள்!