வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலையின்(அப்புத்துரை பள்ளிக்கூடம்) வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக தீவகவலயக்கல்விப்பணிப்பாளர் திரு.தி.ஜோன்குயின்ரஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக ஓய்வு நிலைக் கல்விப்பணிப்பாளர் வி.ராதாகிருஸ்ணன் அவர்களும் கௌரவ விருந்தினராக கல்விக் காருன்யன் E.S.P.நாகரத்தினம் அவர்களும் கலந்துகொண்டனர். ஆவர்களுடன் பிரதேச சபை உறுப்பினர்கள் வீ.கண்ணன்,க.பாலச்சந்திரன்,யாழ் பல்கலைக்கழக சிரேஸ்ர விரிவுரையாளர் கலாநிதி வீரமங்கை யோகரத்தினம்,காரைநார் கோட்டக்கல்வி அதிகாரி பு.ஸ்ரீவிக்னேஸ்வரன் மற்றும் அயற்பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

எனது ஊர் காரைநகர் காலாண்டு சஞ்சிகையின் தொகுப்பாசிரியர் தீசன் திரவியநாதன் அவர்களினால் ஓகன் இசைக்கருவி பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.