இளைய தலைமுறையினரின் நெறிப்படுத்தலில் கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும் – 2019 – ஆவணி 04, 2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் Morningside Park Area 3 & 4

 

இளைய தலைமுறையினரின் நெறிப்படுத்தலில்

கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப் போட்டிகளும் – 2019

ஆவணி 04, 2019 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் Morningside Park Area 3 & 4

வருடாவருடம் காரை உறவுகள் அனைவரும் கலந்து சிறப்பித்து, ஊர் நினைவுகளை கொண்டாடி மகிழ்கின்ற விழாவாக ஒன்றுகூடல் அமைந்து வருகின்றது. வழமைபோல இவ்வருடமும் ஆவணி மாதம் 04, 2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பாக நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

எமது ஊர் குறித்த சிந்தனையையும் ஈடுபாட்டினையும் எமது இளம் சந்ததிக்கு ஏற்படுத்த வழியேற்படுத்தும் நிகழ்வு. இம்முறை உறவுகளின் இளம்சந்ததியினரை முழுமையாக காரை கலாச்சார நீரோட்டத்தில் உள்வாங்கி, அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற வழிவகை செய்யப்படுகின்றது.

ஆகையால் இளைய தலைமுறையினராகிய பன்னிரெண்டு வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள், கல்லூரிகளில் கற்கை நெறிகளை மேற்கொள்பவர்கள், பல்கலைக்கழகம்களில் பட்டப்படிப்பை பயில்பவர்கள், உயர் கல்வியின் பின்னரான உள்ளக/வெளிக்கள பயிற்சிகளை மேற்கொள்பவர்கள் மற்றும் தொழில்புரிபவர்கள் என்கின்ற வகைகளில் அடங்குகின்ற அனைவரையும் தங்கள் விபரம்களை பதிந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

பிள்ளைகளுடைய முழுப்பெயர் , மின்னஞ்சல் முகவரி மற்றும் கல்வி பயிலும் தரம் ஆகிய விபரம்களை karainagar@gmail.com மன்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி

நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்