காரைநகர் ஆயிலி சிவஞானோதயா வித்தியாலயத்திலிருந்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவன் சிற்சபேசன் கேசவராம் 185 புள்ளிகளைப் பெற்றுச் சித்தியடைந்துள்ளார்.

காரைநகர் ஆயிலி சிவஞானோதயா வித்தியாலயத்திலிருந்து தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவன் சிற்சபேசன் கேசவராம் 185 புள்ளிகளைப் பெற்றுச் சித்தியடைந்துள்ளார்.

இப்பாடசாலையிலிருந்து 10 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர் அவர்களில் ஏனைய 9 பேரும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப் பாடசாலை மிக அண்மையிலேயே மீள ஆரம்பிக்கப்பட்டது. மீள ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதற் தடவையாக இவ்வாண்டே மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.

திரு சுப்பிரமணியம் கதிரிகாமநாதன் இப்பாடசாலையை மீள ஆரம்பிப்பதற்கு பல்வேறு வழிகளில் உதவியதுடன் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்காக இரு மாடிக் கட்டடம் அமைத்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.