காரை அபிவிருத்திச் சபைத் தலைவர் திரு. பரமநாதன் விக்கினேஸ்வரன் அவர்களுக்கு மதிப்பளிப்பு
கடந்த 16.09.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காரைத்தென்றல்-2018 நிகழ்வில் முன்னாள் வடமாகாண கல்விப் பணிப்பாளரும், காரை அபிவிருத்திச் சபைத் தலைவர் திரு. பரமநாதன் விக்கினேஸ்வரன் அவர்களை கௌரவிக்கும் முகமாக பிரான்ஸ் நலன்புரிச் சங்கத்தினரின் நினைவுப் பரிசையும், கௌரவத்தினையும், சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவரும், செயற்குழு உறுப்பினருமாகிய திரு. பூபாலபிள்ளை விவேகானந்தா பொன்னாடை போர்த்தியும், நினைவுப் பரிசில் வழங்கியும் மதிப்பளித்தார்கள்.
நிகழ்வின் நிழற்படங்களை கீழே காணலாம்
நன்றி
“ஆளுயர்வே ஊருயர்வு”
“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”
இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
செயற்குழு உறுப்பினர்கள்
இளையோர் அமைப்பு
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்
24.09.2018