காரைநகர் பிரதேச செயலர் பிரிவு பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான பெருவிளையாட்டுப் போட்டியின் தெரிவுப் போட்டிகளின் தொடர்ச்சி நேற்று முந்தினம் சனிக்கிழமையும் சோலையான் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

காரைநகர் பிரதேச செயலர் பிரிவு பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான பெருவிளையாட்டுப் போட்டியின் தெரிவுப் போட்டிகளின் தொடர்ச்சி நேற்று முந்தினம் சனிக்கிழமையும் சோலையான் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. 

முன்னதாக காலை 6.00 மணியளவில் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய முன்றலிலிருந்து பொன்னாலைச் சந்தி சென்று மீண்டும் பிரதேச செயலகம் வரையான 9 கி,மீ தூர வீதியோட்ட போட்டி இடம்பெற்றது. பின்னர் சோலையான் விளைனாட்டுத் திடலில் விளையாட்டுக்கழகங்களுக்கிடையேயான கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன. போட்டிகளில் கலந்துகொண்ட பிரித்தானிய காரை நலன்புரிசிசங்கத்தின் தலைவர் ப.தவராசா வீர வீராங்கனைகளை அறிமுகம் செய்து வைத்தார்.