காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணி

காரைநகா் மணற்காடு அருள்மிகு கும்பநாயகி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய திருப்பணி வேலைகளின் தற்போதைய முன்னேற்றத்தினையும் புதிதாக அமைக்கப்பட்ட வைரவா் ஆலயம் மூலஸ்தான வேலைப்பாடுகள் காளிகோயில் மணிமண்டபம் ஆகியவற்றின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ளததையும் படங்களில் காணலாம்.

வெகு விரைவில் கும்பாபிஷேக தினம் திருப்பணிச்சபையினரால் அறிவிக்கப்படவுள்ள நிலையில் ஆலயத்தின் உட்பிரகாரம் முழுவதும் கொங்கிறீற் கூரை அமைப்பதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது. உலகெங்கும் பரந்து வாழும் அம்பிகையின் அடியவா்கள் இத்திருப்பணியினையும் நிறைவேற்றுவதற்கு தாராளமாக வாரி வழங்குமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றனா் ஆலய திருப்பணிச்சபையினா்.