மொழித்திறன் போட்டிகள் தொடர்பான அறிவித்தல்

மொழித்திறன் போட்டிகள் தொடர்பான அறிவித்தல்

கனடா காரை கலாச்சார மன்றத்தினால் வழமைபோல வருடம்தோறும் நடாத்தப்படுகின்ற மொழித்திறன் போட்டிகள் இம்முறையும் September 2, 2018 ஞாயிற்றுக்கிழமை Scarborough Civic Center இல் காலை 8 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளன. அனைத்து கனடா வாழ் காரை சிறார்களும் பங்குபற்றும் வகையில் ஆங்கில மொழியிலான எழுத்து , பேச்சுப்போட்டிகளும், தமிழ் மொழியிலான எழுத்து , பேச்சு, வாசிப்பு , பண்ணிசைப் போட்டிகளும் நடைபெறவுள்ளது. இப் போட்டிகளில் பங்குபற்றும் சிறுவர், சிறுமியர் அனைவரும் தங்கள் விபரங்களை அன்றைய தினம் காலையில் பதிந்து , சகல போட்டிகளிலும் பங்குபற்றலாம். பதிவுகள் காலை 8.00 – 8.45 மணி வரை பெற்றுக் கொள்ளப்படும். போட்டிகள் 9.00 மணிக்கு ஆரம்பமாகி 12 மணி வரை இடம்பெறும். இப்போட்டிகளில் பங்குபற்றி இளம் சிறார்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து, அவர்களின் ஆளுமை விருத்திக்கு ஊக்கப்படுத்துமாறு பெற்றோர்களை பணிவன்போடு கேட்டுக்கொள்கின்றோம் .

நிர்வாகசபை

கனடா காரை கலாச்சார மன்றம்