காரை வசந்தம் 2018 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன!

காரை வசந்தம் 2018 மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு சிறுவர்கள் மற்றும் பெரியோர்களின் நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கனடா வாழ் காரைநகர் மக்களின் வரலாற்று பெருவிழாவான காரை வசந்தம் வழமைபோல் இம்முறையும் கோலாகலமாக September 22, 2018 மாலை 5 மணி முதல் 11 மணி வரை ரொரன்ரோ தமிழ் இசைக் கலா மன்ற மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

பரதநாட்டியம், சங்கீதம், நாடகம் உட்பட அனைத்து வகையான முத்தமிழ் நிகழ்வுகளுடன் சுவாரசீகமான நிகழ்ச்சிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

கலை நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கும் சிறுவர்கள், ஆசிரியர்கள், பெரியோர்கள் September 02, 2018ற்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்: karainagar@gmail.com ஊடாகவோ அன்றி 647 818 7443, 416 418 5697 என்ற தொலைபேசி ஊடாகவோ தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் காரை வசந்தம் விழா நிகழ்வின் போது தமிழ் தாய் வாழ்த்து, கனடிய தேசிய கீதம், மன்ற கீதம் என்பவற்றினை இசைப்பதற்கு ஆர்வமுள்ள சிறுவர், சிறுமியர் September 02, 2018ற்கு முன்னர் மன்றத்தின் மின்னஞ்சல்: karainagar@gmail.com ஊடாகவோ அன்றி 647 818 7443, 416 418 5697 என்ற தொலைபேசி ஊடாகவோ தொடர்பு கொண்டு பதிந்து கொள்ளுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி

நிர்வாகம்
கனடா-காரை கலாச்சார மன்றம்

“WORKING TOGETHER IS SUCCESS”