காரைநகர் பிரதேசத்திற்கான குழாய் நீர் விநியோகம் 2020 இல் ஆரம்பிக்கப்படும்

காரைநகர் பிரதேசத்திற்கான குழாய் நீர் விநியோகம் 2020 இல் ஆரம்பிக்கப்படும்

காரைநகர் பிரதேசத்திற்கான குழாய் நீர் விநியோகம் 2020 இல் ஆரம்பிக்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரி.

காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ.சரவணபவன், அங்கஜன் ராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது

இக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் குழாய் நீர் விநியோகத்திற்கான நடவடிக்கைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றது. அதற்கான வேலைத்திட்டத்தில் 80 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளது. பிரதான வீதிகள் ஊடாக குழாய்கள் பொருத்தும் பணிகளும் தண்ணீர் தாங்கி அமைக்கும் பணிகளும் நிறைவுக்கு வருகின்றது.

உள்ளக வீதிகளில் குழாய் பொருத்துவதற்காகக் கேள்வி கோரல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனவே விரைவில் அப்பணியும் ஆரம்பிக்கப்படும் தாளையடியில் இருந்து கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.