பிரதேசத்தின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டே பிரதேச அபிவிருத்திக் கூட்டங்கள் நடாத்தப்படுகின்றன.

பிரதேசத்தின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டே பிரதேச அபிவிருத்திக் கூட்டங்கள் நடாத்தப்படுகின்றன.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இக் கூட்டத்திற்கு வருகைதந்து தமது திணைக்களப் பிரச்சினைகளை முன்வைப்பது கட்டாயமானது

பிரதேசத்தின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டே பிரதேச அபிவிருத்திக் கூட்டங்கள் நடாத்தப்படுகின்றன. இக் கூட்டத்தில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் உடனடியாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

எனவே சம்பந்தப் பட்ட அதிகாரிகள் இக் கூட்டத்திற்கு வருகைதந்து தமது திணைக்களப் பிரச்சினைகளை முன்வைப்பது கட்டாயமானது. எனவே இக் கூட்டத்திற்கு வருகை தரவேண்டிய தீவக வலயக் கல்வி அதிகாரிகள் வருகை தரவில்லை கடந்த கூட்டத்திற்கும் வருகை தரவில்லை எனவே இதற்கான நடவடிக்கையை உடன் எடுக்குமாறு வலியுறுத்தினார் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்

இது தொடர்பாக கல்வி அமைச்சருக்கும் உரிய அதிகாரிகளுக்கும் எழுத்துமூலம் அறிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினரகள்; ஈ.சரவணபவன், அங்கஜன் ராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இக் கூட்டத்திலேயே மேற்படி பணிப்புரையினை விடுத்தார் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.

பிரதேச அபிவிருத்தியில் கல்விக்கான இடம் மிக முக்கியமானது அது தொடர்பாக ஆராய்வதற்கும் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கும் கல்வி அதிகாரிகள் இங்கு சமூகம் கொடுக்க வேண்டும் என்றார்.

காரைநகர் ஊரி அ.மி.த.க. பாடசாலையினைத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இப் பாடசாலையில் தரம் 5 வரையான வகுப்புக்களே தற்போது நடைபெற்று வருகின்றது. இங்கு 120 இற்கம் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களில் வருடாந்தம் 30 மாணவர்கள் தரம் ஆறுக்காக வெளியேறுகின்றனர்.வெளியேறும் மாணவர்கள் நீண்ட தூரம் சென்றே தரம் ஆறில் கற்க வேண்டி உள்ளது. வேறு பாடசாலைக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் சீரின்மை மற்றும் வீதிகள் மிக மோசமாகச் சேதமடைந்துள்ளது.இதனால் இங்குள்ள வறுமைப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல இன்னல்களை அனுபவிப்பதுடன் கல்வியில் ஆர்வம் காட்டப் பின்னடிக்கினறனர்.எனவே இப்பாடசாலையில் தரம் 6 தொடக்கம் வகுப்புக்களை ஆரம்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

எனினும் கூட்டம் முடிவுறும் தறுவாயில் தீவக வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எதுவித ஆயத்தமும் இன்றி கூட்டத்திற்குச் சமூகமளித்திருந்தார் அதனால் அவரால் உரிய பதில்கள் மற்றும் தரவுகளை சமர்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.