அநுதாபச் செய்தி

Pon.panchadchara kurukal

 

                                                                           சிவஸ்ரீ பொன்.பஞ்சாட்சரக் குருக்கள்
           (காரைநகர், தங்கோடை நாகம்மாள் கோயில் பிரதம குருக்கள், கனடா ஸ்ரீ கரன் மங்கள பவன அதிபர்)

காரைநகர், தங்கோடை நாகம்மாள் கோயில் பிரதம குருக்களும், கனடா ஸ்ரீ கரன் மங்கள பவன அதிபருமாகிய சிவஸ்ரீ.பொன்.பஞ்சாட்சரக் குருக்கள் ஐயா அவர்கள் இன்று காலை கனடாவில் சிவபதமடைந்த செய்தி கேட்டு எமது மன்றம் ஆழ்ந்த கவலை அடைகின்றது.

காரைநகர் மக்களின் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய குருக்கள் ஐயா அவர்கள் காரைநகரிலும் கனடாவிற்கு புலம் பெயர்ந்த பின்னர் கனடாவிலும் எமது ஊர் மக்கள் சைவப் பாரம்பரியத்தைப் போற்றி அநுசரிப்பதற்கு உறுதுணையாக விளங்கி வந்தவர் என்றால் மிகையாகாது.

அன்னார் எமது மன்ற விழாக்களில் தவறாமல் சமூகமளித்து விழாவினை மங்கலகரமாகத் தொடக்கி வைப்பது வழக்கம் ஆகும்.

அத்துடன் அன்னாரின் புதல்வரும் Archanas & Co  உரிமையாளரும் TVI/ CMR  கலைஞரும் ஆகிய திரு.P.S. சுதாகரன் அவர்களும் எமது மன்றம் ஆண்டு தோறும் நடத்தும் காரை வசந்தம் கலைவிழாவிற்கு தனது ஊடக, கலைப் பங்களிப்பினையும் தமது நிறுவனத்தின் நிதி அநுசரணையினையும் தவறாது வழங்கி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னாரை இழந்து தவிக்கும் அன்னாரின் மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினருக்கும் எமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பரத்துறை சௌந்தராம்பிகா சமேத சுந்தரேசுவரப் பெருமானை வேண்டி வணங்குகின்றோம்.

கனடா-காரை கலாச்சார மன்றம்