மரணஅறிவித்தல், சிவஸ்ரீ பொன்.பஞ்சாட்சரக் குருக்கள்

ss

                                                        சிவஸ்ரீ பொன்னுத்துரைஐயர் பஞ்சாட்சரக்குருக்கள்

காரைநகரை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட காரைநகர் தங்கோடை நாகம்மாள் கோயில் பிரதம குருக்களும், ஆனைக்குட்டிஐயரின் பேரனும், கனடா ஸ்ரீ கரன் மங்கள பவன அதிபருமான சிவஸ்ரீ பொன்னுத்துரைஐயர் பஞ்சாட்சரக்குருக்கள் அவர்கள் ஏப்ரல் மாதம் 12ம் திகதி சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

 அன்னார் ஆனைக்குட்டிஐயர் அவர்களின் அன்புப் பேரனும், பொன்னுத்துரைஐயர் – சொர்ணம்மா தம்பதிகளின் மகனும் , புங்குடுதீவு கலட்டி பிள்ளையார் கோயில் பிரதம குருக்கள் பஞ்சாட்சர ஐயர் – விஜயலக்சுமி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சரோஜாவின் அன்புக் கணவரும் P.S. சுதாகரசர்மா, சுதாரஞ்ஜனி, ஸ்ரீரஞ்ஜனி, ஸ்ரீகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், அனுஷா, வாசுதேவக்குருக்கள், தாரண சர்மா, வைஸ்ணவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

 பரமேஸ்வரி, சரஸ்வதி, சுப்பிரமணிய ஐயர், குமாரசாமிக்குருக்கள், மார்க்கண்டு சர்மா ஆகியோரின் அன்பு சகோதரனும், கணேசராஜக்குருக்கள், கருனாகடாச்சி, பாலசுப்பிரமணியக்குருக்கள், விமலாம்பிகை , கிருஷ;ணராஜக்குருக்கள், விஜயகுமாரக்குருக்கள் ஆகியோரின் அன்பு மைத்துனரும், அஸ்வின், அபூர்வா, அர்ச்சனா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

 

அன்னாரின் பூதவுடல் ஏப்ரல் மாதம் 12ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிமுதல் 9 மணிவரை 8911 Woodbine Avenue, Markham இல் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு மறுநாள் ஏப்ரல் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 8 மணிவரை அதே இடத்தில் ஈமைக்கிரிகைகள் நடைபெற்று காலை 8 மணிமுதல் 9 மணிவரை 256 Kingston Road இல் அமைந்துள்ள St John's Norway Cemetery & Crematorium இல் தகனம் செய்யப்படும்.

 

 இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

      தொடர்புகளுக்கு:

          416 292 0053

           416 292 0033