காரைநகர் மழலைகள் பூங்கா (காரை கிட்ஸ் பார்க்) ஜந்தாவது ஆண்டு நிறைவு விழாவும் கலைவிழாவும்

 நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை காரைநகர் இந்துக் கல்லூரி
 நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் வே.தர்மரட்ணம் அவர்களும் கௌரவ விருந்தினராக தொழிலதிபர் தியாகராசா பரமேஸ்வரனும் சிறப்பு விருந்தினராக யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை விரிவுரையாளர் கலாநிதி வீரமங்கை யோகரத்தினமும் கலந்து சிறப்பித்தனர்.