மாபெரும் கலைஞர் கே.எஸ்.பாலசந்திரன் அவர்களுக்கு கனடா-காரை கலாச்சார மன்றத்தின் கண்ணீர் அஞ்சலி

மாபெரும் கலைஞர் கே.எஸ்.பாலசந்திரன் அவர்களுக்கு 

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் கண்ணீர் அஞ்சலி

ஈழத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவரான கே.எஸ். பாலச்சந்திரன் இன்று காலமானார். 

தனிநடிப்பு மேடை, வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி, எழுத்து என பல துறைகளில் கால்பதித்தவர் திரு.சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்கள்.

ஈழத்தில் இவர் நடித்த புளுகர் பொன்னையா, தணியாத தாகம், கிராமத்துக் கனவுகள், கோமாளிகள் கும்மாளம் 

ஆகியவை பிரபலமான நாடகங்களாகும். தனிநபர் நகைச்சுவை என்ற வகையில் இவர் அறிமுகப் படுத்திய அண்ணை ரைற்றை அறியாதவர்கள் ஈழத்தில் இருந்திருக்க முடியாது.

கனடாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் பல நாடகங்களில் நடித்தது மட்டுமன்றி பல நாடகங்களை எழுதி இயக்கியும் வந்துள்ளார். 

அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், கலை உலகினர் ஈழத்து கலை ஆர்வலர்களுடன் கனடா காரை கலாச்சார மன்றமும் இந்தத் துயரில் பங்குகொள்கிறது.KSBala2

நிர்வாகம்

கனடா-காரை கலாச்சார மன்றம்