காரைநகா் மணற்காடு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய பாலஸ்தாபனம் கடந்த 10/.02/.2014 சிறப்பாக நடந்து முடிந்திருக்கும் நிலையில் அம்பாளின் மூலஸ்தானம், அா்த்த மண்டபம் முதலியவற்றை கருங்கல்லில் அமைப்பதற்கு திருப்பணிச் சபையினா் ஆலோசித்து அதற்கமைவாக கருங்கல்லில் அமைப்பதற்காக திருப்பணிச்சபையினா் பல ஆலயங்களுக்கும் சென்று கலந்தாலோசித்து வருகின்றார்கள். அதன் ஒரு கட்டமாக தென்னிந்தியாவின் ஸ்தபதி பிரபாகரன் குழுவினரை வடமாகாண ஆலயம் ஒன்றில் சந்தித்து கலந்தாலோசனையில் ஈடுபட்டனா்.