காரை கதம்பம் 27-01-2018 – Karai Kathambam 27-01-2018

 

அன்பான பிரித்தானிய வாழ் காரை மக்களே,

 

காரை கதம்பம் 27-01-2018 – Karai Kathambam 27-01-2018

எமது பிரித்தானிய காரை நலன்புரிச்சங்க அங்கத்தவர்களின் வேண்டுகோளிற்கிணங்க எமது வருடாந்த நிகழ்வான காரைக் கதம்பம் (பொங்கல் விழா) குட்டி மழலைகளை உள்வாங்கி உற்சாகப்படுத்தும் முகமாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. உங்கள் பிள்ளைகளை ஊராருடனும் உற்றார் உறவினருடனும் பகிர்வதனால் நாம் எமது பிள்ளைகள் எமது ஊரவர்கள் என்ற அடையாளத்தையும் ஊரவர் ஒருவருடன் ஒருவர் உறவாடுவதற்கான உறவுப் பாலம்தான் எமது நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம். ஆகவே, இம்முறை பார்வையாளர்களிற்கு தனி நபரிற்கு £5 மற்றும் பங்குபற்றும் பிள்ளைகளிற்கு £10. தனியாகவோ குழுவாகவோ ஒரு நிகழ்ச்சியில் பங்குபற்ற முடியும் (எல்லா பிள்ளைகளிற்கும் இடமளிக்க வேண்டும் என்பதனால்). இந்நிகழ்வில் பங்குபற்ற விரும்பும் பிள்ளைகளின் பெற்றோர் தயவுசெய்து 15/01/2018 இற்கு முன்பாக பதிவுகளை ஏற்படுத்துமாறு வேண்டுகிறோம்.

முக்கிய குறிப்பு : மாலை 5 மணிக்கு முன்பாக சமூகமளிப்போருக்கு அனுமதி இலவசம்

திகதி: 27 தை (January) 2018

நேரம்: பிற்பகல் 5 மணி

இடம்: Preston Manor School, Carlton Avenue, Wembley, HA9 8NA

தொடர்புகளிற்கு:

சித்ரா (07828156008)

வதனா (07450863391)

ராஜரத்தினம் ( 07747640575)

நாதன் (07944232014)

மின்னஞ்சல்: info@karainagar.org

மேலதிக தகவல்கள் : http://www.karainagar.org/karai-kathambam-2018-notification/

நன்றி,
நிர்வாகம்
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்