யாழ்ற்ரன் கல்லூரி சாரண மாணவர்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.

யாழ்ற்ரன் கல்லூரி சாரண மாணவர்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.

 

யாழ்ற்ரன் கல்லூரி சாரண இயக்கத்தைச் சேர்ந்த ஒன்பது மாணவர்கள் தங்களின் அடுத்த தரமான மாவட்ட ஆணையாளர் விருதினைப் ( District Commissioner code) பெற்றுள்ளனர். இவர்கள் இன்னும் சிறிது காலத்தில் ஜனாதிபதி விருதினைப்பெறத் தகைமை பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட ஆணையாளர் விருது பெற்ற சாரணர்களுக்கும்; நெறிப்படுத்திய சாரண ஆசிரியர் திரு.ஆ.யோகலிங்கம் அவர்களுக்கும் கல்லூரி அதிபர் தனது பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றார்.

 

நீண்ட கால இடைவெளியின் பின்னர் கடந்த ஆண்டு மீண்டும் புனரமைக்கப்பட்ட யாழ்ற்ரன் கல்லூரியின் சாரண இயக்கம் புதிய உத்வேகம் கொண்டு வருவது மட்டுமன்றி காரைநகரில் உள்ள பல ஆலயங்களில் நடைபெறும் திருவிழாக்களிலும் பொது நிறுவனங்களிலும் தமது சேவையைச் செய்து பாராட்டைப்பெற்றுள்ளனர். குறிப்பாக காரைநகர் ஈழத்துச்சிதம்பரத்தில் திருவெம்பாவை உற்சவத்தின் போது மாணிக்கவாசகர் மடாலயத்தில் நடைபெறும் அன்னதானப் பணிகளில் இவர்களின் சேவை அவ் அன்னதான சபையினரால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

மாவட்ட ஆணையாளர் விருது பெற்ற சாரணர்கள்

 

1.   செல்வன்.க.கஜந்தன்

2.   செல்வன்.வி.தர்ஷன்

3.   செல்வன்.சி.சசிதரன்

4.   செல்வன்.பொ.ஜெயக்குமார்

5.   செல்வன்.சி.நவநீதன்

6.   செல்வன்.சி.ராகுலன்

7.   செல்வன்.க.காண்டீபன்

8.   செல்வன்.செ.நிறோசன்

9.   செல்வன்.ச.திருக்குமரன்