விஞ்ஞான நாடகப்போட்டியில் மாகாண மட்டத்தில் யாழ்ற்ரன் கல்லூரி முதலிடம் பெற்றது.
உலக விஞ்ஞான தினம் 2013 இனை முன்னிட்டு இலங்கைத்தேசிய விஞ்ஞான மன்றத்தினால் நடாத்தப்பட்ட விஞ்ஞான நாடகப்போட்டியில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி மாணவிகள் வடமாகாணத்திலே முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டனர்.
வாழ்வும் சுகாதாரமும் என்ற இத்தலைப்பிலான இந்நாடகம் தேசிய மட்டத்திற்குத் தெரிவாகி கடந்த வாரம் கொழும்பு மருதானை மகாபோதி மண்டபத்தில் நடைபெற்ற தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றினர். இந்நாடகத்தில் கலந்து கொண்ட மாணவிகளையும் நாடகத்தை நெறிப்படுத்திய ஆசிரியர்கள் திரு.பா.பாலமுரளி திரு.கு.பிரதீபன் செல்வி.யோ.விம்சிகா ஆகியோரைக் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் பாராட்டுகின்றார்.
இவ் ஆண்டு யாழ்ற்ரன் கல்லூரி மாணவிகள் தேசிய மட்ட நிகழ்வுகளில் கொழும்பில் இரண்டாவது தடவையும் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கொழும்பு சுயாதீன நிறுவனத்தினரால் நடாத்தப்பட்ட புத்தாக்கப் போட்டிகளில் கலந்து கொண்டமையையும் இவ் இணையத்தளத்தில் தெரிவித்திருந்தோம்.
கடந்த 2012ம் ஆண்டு யாழ்ற்ரன் கல்லூரி மாணவர்கள் தேசிய மட்டத்தில் மூன்று நிகழ்வுகளில்; கலந்து கொண்டமையை இவ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
நாடகத்தில் பங்கு பற்றிய மாணவிகள்
1. செல்வி. த. திருமகள்
2. செல்வி.ம.நவநிலா
3. செல்வி.மோ.கிர்ஷிகா
4. செல்வி.ச.ரோகிணி
5. செல்வி.செ.கமலேஸ்வரி
6. செல்வி.பா.கவிதா
7. செல்வி.வி.வேதாரணி
8. செல்வி.கு.கோபிதா