பாடசாலைச் சுகாதார மேம்பாட்டுச்செயற்றிட்டம்.

பாடசாலைச் சுகாதார மேம்பாட்டுச்செயற்றிட்டம்.
தீவக வலயத்திற்கான பாடசாலை சுகாதார மேம்பாட்டுச் செயற்றிட்டம் (2013)
2013/10/25 ம் திகதி காலை 8.30 மணிக்கு தீவக வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.தி.ஜோன் குயின்ரஸ் அவர்களின் தலைமையில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெற்றது.
பிரதமவிருந்தினராக வட மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் திரு.ஆ.இராசேந்திரம் அவர்களும் சிறப்பு  விருந்தினராக காரைநகர் பிரதேச செயலர் திருமதி.தேவநந்தினி பாபு அவர்களும் பிரதேச வைத்திய பொது அதிகாரி திருமதி ஜான்சி ஆனந்தராயா அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
1.      சிகிச்சை முகாம்கள்
2.      கண்காட்சிகள்
3.      பாடசாலை மாதிரி சிற்றுண்டிச்சாலை
4.      கலைநிகழ்ச்சிகள்
என்றவாறு மிகச்சிறப்பான முறையில் முகாம் நடைபெற்றது.தீவக வலயத்திற்கான இச்சுகாதார மேம்பாட்டு முகாமினை நல்ல முறையில் திட்டமிட்டு ஒழுங்குபடுத்திய தீவக வலயத்தின் கல்விப்பணிப்பாளர் மற்றும் யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் ஆகியோருக்கு பிராந்திய வைத்திய சுகாதார அதிகாரி வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அவர்கள் தனது பாராட்டுக்களைத்தெரிவித்திருந்தார்.

DSC06521 DSC06526 DSC06536 DSC06541