காரைநகரின் புகழ் பூத்த தவில் கலைஞர் கலாபூஷணம் கைலயாசர் கம்பர் வீராச்சாமி அவர்கள் சுவிற்சர்லாந்து வந்தடைந்தார்.

காரைநகரின் புகழ் பூத்த தவில் கலைஞர் கலாபூஷணம் கைலயாசர் கம்பர் வீராச்சாமி அவர்கள் சுவிற்சர்லாந்து வந்தடைந்தார்.

 காரைநகரின் புகழ் பூத்த தவில் கலைஞர் கலாபூஷணம் கைலயாசர் கம்பர் வீராச்சாமி அவர்கள் சுவிஸ் பேர்ண்  ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் ஆலயத்தின் கடந்த 25.06.2017இல்  வருடாந்த மகோற்சவத்திற்காக வருகைதர இருந்த பொழுதிலும் சுவிஸ் நாட்டின் விசா கிடைப்பதில் ஏற்பட்ட கால தாமத்தால் இன்று சுவிஸ் வாழ் காரை மக்களினதும், கோவில் நிர்வாகத்தினரதும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 16.08.2017 புதன் கிழமை காலை 6.40இற்கு சூரிக் விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். என்பதை மிக மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.

காரைநகரின் புகழ் பூத்த மூத்த தவில் கலைஞர் கலாபூஷணம் கைலயாசர் கம்பர் வீராச்சாமி அவர்களை  முதலாவதாக சுவிற்சர்லாந்துக்கு அழைத்து கௌரவிக்கப்பட விருப்பது குறிப்பிடத்தக்கது.

24.12.2015 வியாழக்கிழமை அன்று சான்றோர், கலைஞர்கள் கௌரவிப்பும், மாணவர்கள் பரிசளிப்பும் நாட்காட்டி வெளியீடும் இணைந்த முப்பெரும் விழாவாக காரை அபிவிருத்திச் சபைத்தலைவர் திரு.ப.விக்கினேஸ்வரன் தலைமையில்  காரைநகர் ஆயிலி சிவஞானோதய வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இவ் முப்பெரும் விழாவில் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் வாழ்த்தி வழங்கிய வாழ்த்துப்பாவினை கிழேகாணலாம்.

 
                                                                     நன்றி

 

"ஆளுயர்வே ஊருயர்வு"

"நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்".


                                                                                                             இங்ஙனம்.
                                                                                       சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                             செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                              சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                                16.08.2017

 

Veerachamy