மரண அறிவித்தல்
தம்பையா கனகரத்தினம்
தோற்றம்: 31.08.1955 மறைவு: 15.08.2017
காரைநகர் செம்பாட்டை பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா கனகரத்தினம் 15.08.2017 செவ்வாய்க்கிழமையன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற தம்பையா செல்லம்மாவின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமசாமி பொன்னம்மாவின் மருமகனும், காலஞ்சென்ற அருந்தேஸ்வரி(யசோ ) அவர்களின் அன்புக்கணவரும், அரவிந்தன் (கனடா), தவராணி (பிரான்ஸ்), அருள்ராஜா (பிரான்ஸ்), இந்திராணி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், அஞ்சலா , சச்சிதானந்தம், சிவதர்சினி, கணநாதன் ஆகியோரின் மாமனாரும், கனகேஸ்வரி , புவனேஸ்வரி , நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச்சகோதரனும், காலஞ்சென்ற மகாலிங்கசூரியர் , தர்மலிங்கம், சிவசோதி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், கனகேஸ்வரி , விக்னேஸ்வரன்(கொழும்பு ), மகேஸ்வரன் (வவுனியா), சந்திரேஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்பு மச்சானும், அஸ்வின் , எய்லின் , தேனுஜன் , சைந்தவி , ஷாலினி, பிரதீஸ், யதுஸ், பிரவீன், சகானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இறுதிச்சடங்குகள் அன்னாரின் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை 20/08/2017 நடைபெற்று பண்டாரிக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
அரவிந்தன் (கனடா) (416) 509 8331
தவராணி (பிரான்ஸ்) 033618337033
அருள்ராஜா (பிரான்ஸ்) 033751043512
இந்திராணி (கனடா) (416) 568 6547