யாழ்ற்ரன் கல்லூரி ஆசிரியை செல்வி சுபத்திராதேவி இராஜசிங்கம் அவர்கள் இலங்கை குடியரசின் கல்வி அமைச்சினால் சிறந்த ஆசிரியராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

DSC00086காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி ஆசிரியை செல்வி சுபத்திராதேவி இராஜசிங்கம் அவர்கள் இலங்கை குடியரசின் கல்வி அமைச்சினால் சிறந்த ஆசிரியராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரைக் கௌரவித்து இதற்கான விருதும் சான்றிதழும் 2013.10.05 ம் திகதி சனிக்கிழமை மகரகம தேசிய கல்வி நிறுவனத்தில் இலங்கைக் குடியரசின் பிரதம மந்திரி கௌரவ தி.மு.ஜயரத்ன அவர்கள் தலைமையில் நடைபெற்ற 'ஆசிரியர் பிரதீபா பிரபா' விருது வழங்கும் விழாவில் கல்வி அமைச்சர் கௌரவ பந்துல குணவர்த்தன அவர்களால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

ஆசிரியர் செல்வி.சுபத்திராதேவி இராஜசிங்கம் அவர்கள் மேலும் பல பட்டங்களையும் விருதுகளையும் பெற யாழ்ற்ரன் கல்லூரிச்சமூகம் வாழ்த்துகின்றது. (ஆசிரியை காரைநகர் சந்தம்புளியடியைச்சேர்ந்த காலம் சென்ற ஆசிரியர் இராஜசிங்கம் தம்பதிகளின் புதல்வி ஆவார்) மேற்படி ஆசிரியை யாழ்ற்ரன் கல்லூரியில் 09.10.2013 ம் திகதி புதன்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் பொன்னாடை போர்த்திக் கல்லூரிச் சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டார்.

 

DSC00085

DSC00086 

 

DSC00087DSC00088