புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வியாவில் ஐயனார் ஆலயத்தினால் பாராட்டுவிழா நடாத்தி கௌரவிப்பு

காரைநகர் வியாவில் ஜயனார் ஆலயத்தினால் கடந்த மாதம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் காரைநகர் பாடசாலைகளில் கல்வி பயின்று சித்தியடைந்த 19 மாணவர்களுக்கும் பணப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

13.10.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்விற்கு வடமாகாணக் கல்வியமைச்சின் பிரதிச் செயலர் ப.விக்னேஸ்வரன்,கல்விக்காருன்யன் இ.ச.பே.நாகரட்ணம், கோட்டக் கல்வி அதிகாரி பு.விக்னேஸ்வரன்,காரைநகர் அபிவிருத்திச் சபைச் செயலர் இ.திருப்புகழுர்சிங்கம்,உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

ஆலய அறங்காவலர் மகாராணி க.சோமசேகரம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கான பிரதான அனுசரனையினை பிரிட்டனில் உள்ள தொழிலதிபர் நட்டு நட்டுவாணி அவர்கள் வழங்கியிருந்தார்.