திருச்செந்தூரன் மற்றும் விளானை ஞானவைரவர் முன்பள்ளிகளின் வருடாந்த மழலைகள் விளையாட்டு விழா ( 2017.03.19) ஞாயிற்றுக்கிழமை பி.ப 01.30 மணிக்கு திக்கரை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் வே.பரமசிவம்பிள்ளை தலைமையில் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக காரைநகர் பிரதேச செயலக கணக்காளர் திருமதி நி.ராதிகா அவர்கள் கலந்து சிறப்பித்தார். தொடர்ந்து விறுவிறுப்பாக மழலைகள் விளையாட்டுக்கள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்ற மழலைகளுக்கு பரிசில்களும் சான்றிதழும் வழங்கப்பட்டது.இவ்வாண்டிற்கான சிறப்புக் கௌரவத்தை ஓய்வு நிலை கிராம சேவையாளரும் ஆசிரியருமான திரு இ.திருப்புகலூர்சிங்கமும் சங்கத்தின் தலைவர் திரு வே.பரமசிவம்பிள்ளையும் பிரபல ஓதுவார் திரு சு.தர்மலிங்கமும் சித்தாந்த வித்தகர் திரு வே.நடராசா ஆகியோர்க்கு மலர்மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.