கனடா-காரை கலாச்சார மன்றம் விடுக்கும் அவசர அழைப்பு!

CKCA LOGO-2015

 

 

கனடா-காரை கலாச்சார  மன்றம் விடுக்கும் அவசர அழைப்பு!


கனடா காரை கலாச்சார  மன்றத்தின் தற்போதைய நடைமுறை நிதித்செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்த நிலையில் உள்ளன. கடந்த கால நிர்வாக சபைக்கு பொறுப்பான நிர்வாக அங்கத்தவர்கள் மற்றும் தற்போதைய நிர்வாக சபையினருக்கும் இடையில் வங்கிக்கணக்கு தொடர்பாக ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாக மன்றத்தின் அனுசரணையாளர்கள், மன்றத்தின் நலன்விரும்பிகள் கலந்து கொண்டு சுமூகமாக தீர்வினை எட்டுவதற்கான கலந்துரையாடல்.


மார்ச் 04, 2017 சனிக்கிழமை மாலை 2.30 மணிக்கு ஸ்காபுரோ சிவிக் சென்டர் சந்திப்பு அறையில் மேற்படி கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. மன்றத்தின் நிதி அனுசரணையாளர்கள், நலன்விரும்பிகள் கலந்து கொள்ளும் இக்கலந்துரையாடலில் கடந்த கால சம்பந்தப்பட்ட நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து கொண்டு  சுமூகமான தீர்வினை எட்டுவதற்கு வழிகோலுமாறு மன்றத்தின் சார்பில் அன்புடன் அழைக்கின்றோம்.


கடந்த கால நிர்வாக சபையின் சார்பில் வங்கி கணக்கிற்கு கையொப்பம் இடதகுதி வாய்ந்தவர்களான கடந்த நிர்வாக சபையின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருடன் கடந்த நிர்வாக சபை உறுப்பினர்கள் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைக்கவும் இக்கலந்துரையாடல் மூலம் ஜனநாயகரீதியில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.


இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி மன்றத்தின் செயற்பாடுகளை வழமைபோல் முற்கொண்டு செல்லவும் மன்றத்தின் வளர்ச்சியினை தொடர்ந்து முன்னோக்கி நகர்த்தவும் சம்பந்தப்பட்ட அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம்.


                                                                        நன்றி!

                      நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்