விஞ்ஞான ஆய்வு கூடப் போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி இரண்டாம் இடம்
தீவக கல்வி வலயத்தினரால் நடத்தப்பட்ட(2015ஆம் ஆண்டிற்கான) "சிறந்த முறையில் விஞ்ஞான ஆய்வு கூடங்களைப் பேணுதலும் மாணவர்கள் அதனை உச்சநிலையில் பயன்படுத்தலும்" என்ற போட்டியில் யாழ்ற்ரன் கல்லூரி இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளது. இதற்கான விருதினை 12.03.2016 இல் நடைபெற்ற தீவக வலய விஞ்ஞான தினத்தில் கல்லூரி அதிபரிடம் வழங்கப்பட்டது.