மரண அறிவித்தல், திரு.விசுவலிங்கம் கனகேந்திரம் (இளைப்பாறிய அதிபர்) வேதரடைப்பு, காரைநகர்

 


                                  மரண அறிவித்தல்

kanakendram2.copy
                            திரு.விசுவலிங்கம் கனகேந்திரம்

                                     (ஓய்வுபெற்ற அதிபர்)
                                               வேதரடைப்பு, காரைநகர்
தோற்றம்: 20-05-1937                                                              மறைவு: 08-03-2016


வேதரடைப்பு, காரைநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய அதிபர் திரு.விசுவலிங்கம் கனகேந்தரம்(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்கள் 08-03-2016 அன்று செவ்வாய்க்கிழமை கொக்குவிலில் காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம்-மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு-பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சரஸ்வதியின்(ஆசிரியர்) அன்புக் கணவரும், சிவசொரூபி(கட்டடங்கள் திணைக்களம்-வடமகாணம்), திருமகள்தேவி(பிரதேச செயலகம்-யாழ்ப்பாணம்), உமைபாகன்(கனடா), உமைநேசன்(கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்-யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற ரவீந்திரன்(ஆசிரியர்) மற்றும் குகநேசன்(சவுதி), நிரஞ்சனா(கனடா), அனுசா ஆகியோரின் அன்பு மாமனாரும், டினோஜன், சாரங்கன், அபிசன், அஜே, சாருகா, பானுகா ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான அருளானந்தம், பாலசுப்பிரமணியம் மற்றும் இராஜேஸ்வரன், தர்மபாலசிங்கம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார். 


அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-03-2016 அன்று புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் அவரது கொக்குவில் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் காரைநகர் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.


இவ்வறிவித்தலை உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


தகவல்: குடும்பத்தினர் 


தொடர்புகளுக்கு
உமைபாகன்(மகன்) 011-94 77915 6053(இலங்கை), (416)357-3995 (கனடா)