மேற்படி விழா 02.02.2016 காலை 8.30 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே.முருகமூர்த்p தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது. பிரதமவிருந்தினர் ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.ப.விக்கினேஸ்வரன் (தலைவர் காரை அபிவிருத்திச் சபை) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கல்லூரியின் ஓய்வு நிலை ஆசிரியர் திரு.V. ஏகாம்பரநாதன் அவர்களும், பாடசாலை அபிவிருத்திச் சபை செயலாளர் திரு. V.சிற்சபேசன் அவர்களும், கொழும்பு Quency Distributors உரிமையாளர் திரு. S.கணநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். “சைவப் பாரம்பரியமூடான ஆங்கிலக் கல்வி” என்ற நினைவுப் பேருரையை கல்வி அமைச்சின் சமய விழுமியப் பிரிவு நிபுணத்துவ ஆலோசகர் திரு.பா.தனபாலன் அவர்களும் ஆற்றினார்.
இந் நிகழ்வில் கல்லூரி அரசு பொறுப்பேற்க முன்னர் கல்லூரியை நிர்வகித்த காரை வித்தியா பரிபாலன சபையினரின் (Kari Board Of Education) கல்லூரி முகாமையாளர்களான திரு.S.A.கணபதிப் பிள்ளை(தலைப்பா), திரு.K.S.வேலுப்பிள்ளை, திரு.K.S.சோமசுந்தரம், திரு.A.T.ஆறுமுகம் ஆகியோரின் படங்கள் திரை நீக்கம் செய்யப்பட்டன.
கல்லூரி ஆரம்பிப்பதற்கு காணியை நன்கொடையாக வழங்கியவரும் முகாமையாளருமாகிய அமரர் திரு.S.A.கணபதிப் பிள்ளை(தலைப்பா) அவரின் படத்தை திரு. S.கணநாதன் அவர்களும், முகாமையாளர் அமரர் திரு.K.S.வேலுப்பிள்ளை அவரின் படத்தை அவரின் மகன் திரு. V.சிற்சபேசன் அவர்களும், முகாமையாளர் அமரர் திருK.S.சோமசுந்தரம் அவரின் படத்தை திரு.ப.விக்கினேஸ்வரன் அவர்களும், முகாமையாளர் அமரர் திரு.A.T .ஆறுமுகம் அவரின் படத்தை திரு.V. ஏகாம்பரநாதன் அவர்களும் திரை நீக்கம் செய்து வைத்தனர்.
தேசிய மட்டம், மாகாண மட்டங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.