காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி வரும் சனிக்கிழமை(30.01.2016) அன்று பிற்பகல் 1:30 இற்கு பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் தலைமையிலும் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர் திரு.அன்ரன் விமலதாஸ் அவர்களின் வழிநடத்தலிலும் நடைபெற உள்ளது.
பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை விரிவுரையாளரும் யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தின் தலைவருமான திரு.M.இளம்பிறையன் அவர்களும் அவர்தம் பாரியார் மானிப்பாய் மகளிர் கல்லூரி ஆசிரியை திருமதி.S.இளம்பிறையன் அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
சிறப்பு விருந்தினர்களாக தீவக வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு.S.பாஸ்கரன் அவர்களும் காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆ.குமரேசமூர்த்தி அவர்களும் கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை ஆங்கிலத்துறை உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு.மு.கதிரேசம்பிள்ளை அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைக்கப்படுகின்றனர்.
முழுமையான அழைப்பிதழைக் கீழே காணலாம்.