காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளராக திரு.ஆறுமுகம் குமரேசமூர்த்தி அவர்கள் பதவியேற்றுள்ளார்

Mr.A.K.Moorthy

 

காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளராக திரு.ஆறுமுகம் குமரேசமூர்த்தி அவர்கள் பதவியேற்றுள்ளார்


காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளாராகப் பணியாற்றி வந்த திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்கள் அண்மையில் ஓய்வு பெற்றுச் சென்றமையை அடுத்து காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளராக திரு.ஆறுமுகம் குமரேசமூர்த்தி (A.K.மூர்த்தி) அவர்கள் கடந்த வாரம் பதவியேற்றுள்ளார். 
காரைநகர் வாரிவளவைச் சேர்ந்த திரு.ஆ.குமரேசமூர்த்தி அவர்கள் காரைநகர் யாழ்ற்றன் கல்லூரியின் பழைய மாணவராவார். 1980 களில் காரைநகர் இந்துக் கல்லூரியில் இரசாயனவியல் ஆசிரியராகப் பணியாற்றியவர். 'A.K.மாஸ்ரர்' என மாணவர்களால் அன்பாக அழைக்கப்படும் திரு.அ.குமரேசமூர்த்தி அவர்கள் அர்ப்பணிப்பும் சேவை உணர்வுமுள்ள மிகச் சிறந்த இரசாயனவியல் ஆசிரியர் ஆவார்.
காரைநகர் வியாவில் சைவ வித்தியாலயத்தில் அதிபராகப் பணியாற்றிய இவர் பின்னர் 2008-2010 காலப்பகுதியில் காரைநகர் இந்துக் கல்லூரியில் அதிபராகச் சேவையாற்றி கல்லூரியை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல முற்பட்டவர். 
புதிய கோட்டக் கல்விப் பணிப்பாளராகப் பதவியேற்றுள்ள திரு.ஆறுமுகம் குமரேசமூர்த்தி அவர்களை வரவேற்பதுடன் அவரின் பணி சிறப்புற வாழ்த்துகின்றோம்!