யாழ்ற்ரன் கல்லூரியின் 2016 ஆம் ஆண்டிற்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான மரதன் ஓட்டப்போட்டிகள் 17.01.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00மணிக்கு ஆரம்பமானது.கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களால் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்லூரிச் சமூகத்தினரின் கரகோசத்துடன் போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.ஆண்களுக்கான மரதன் ஓட்டம் கல்லூரி முன்றலில் ஆரம்ப்பித்து வேம்படி,வாரிவளவு,வியாவில்,களபூமி ஊடாக மீண்டும் கல்லூரி முன்றலில் முடிவடைந்தது.
பெண்களுக்கான மரதன் ஓட்டம் காரைநகர் துறைமுகத்திலிருந்து ஆரம்பமாகி களபூமி,வலந்தலைச்சந்தி ஊடாக மீண்டும் கல்லூரி முன்றலை வந்தடைந்தது.போட்டிகள் முடிவடைய நடுவர்களுக்காக நடைபெற்ற தேனீர் விருந்தில் நடுவர்களுக்காக வந்து ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நடுவர்களுக்கும்,அம்புலன்ஸ் சேவையை வழங்கிய காரைநகர் வைத்தியசாலை வைத்திய அதிகாரிக்கும் அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
வீதியோட்டம் ஆண்கள்
1ம் இடம் செ.நிறோசன் நாவலர் இல்லம்
2ம் இடம் ம.சஞ்ஜீவன் நாவலர் இல்லம்
3ம் இடம் த.கீர்த்தனன் விபுலானந்தர் இல்லம்
4ம் இடம் இ.தயாரூபன் நாவலர் இல்லம்
5ம் இடம் க.தர்சன் விபுலானந்தர் இல்லம்
வீதியோட்டம் பெண்கள்
1ம் இடம் சௌ.நிரோஜமலர் நாவலர் இல்லம்
2ம் இடம் ம.நவநிலா நாவலர் இல்லம்
3ம் இடம் மோ.றோசி நாவலர் இல்லம்
4ம் இடம் சி.சுகிர்தா நாவலர் இல்லம்
5ம் இடம் ப.யாழினி விபுலானந்தர் இல்லம்