காரைநகர் ஆயிலி சிவஞானோதய வித்தியாலய புதிய கட்டடத் திறப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு வித்தியாலய அதிபர் இ.வசீகரன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் நிகழ்வு இடம்பெற்றது.

DSC_9629 (Copy)

காரைநகர் ஆயிலி சிவஞானோதய வித்தியாலய புதிய கட்டடத் திறப்பு விழா இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு வித்தியாலய அதிபர் இ.வசீகரன் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக பழைய மாணவன் தெய்வீகத் திருப்பணி அரசு சுப்பிரமணியம் கதிர்காமநாதன் கலந்து கொணடு சிறப்பித்ததுடன் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளரும் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான ப.விக்னேஸ்வரன்,வடமாகாண பாடசாலை வேலைகள் பணிப்பாளர் தே.சுரேஸ்குமார் தீவக வலய முன்னாள் கல்விப்பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ்,காரைநகர் கோட்டக்கல்வி அதிகாரி பு.ஸ்ரீவிக்னேஸ்வரன்,காரைநகர் அபிவிருத்திச் சபைப் பொருளாளர் க.பாலச்சந்திரன் வட கடல் நிறுவனத் தலைவர் தியாகராசா பரமேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்த இருமாடிக் கட்டடத்தினை சுமார் ஒரு கோடி ரூபா செலவில் சுவிஸ் நாட்டில் வதியும் இப்பாடசாலையின் பழைய மாணவரான சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களினால் அமைக்கப்பட்டடு பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் நிகழ்வு இடம்பெற்றது.

                           கைத்தொலைபேசியில் படங்களைப் பார்ப்பதற்கு
                                                          இங்கே அழுத்தவும்

https://picasaweb.google.com/109143386914539225429/December242015?authuser=0&feat=directlink

 

காணொளிப் பதிவினை இங்கே காணலாம்