காரைநகர் கோட்டக் கல்விப்பணிப்பாளராக நீண்ட காலம் சேவையாற்றி வந்த திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்கள்; எதிர்வரும் ஜனவரி 4 ஆம் திகதி முதல் ஒய்வு பெற உள்ளார்.
காரைநகர் கோட்டக் கல்வி அலுவலகம் கலாநிதி ஆ.தியாகராசா ம.மகா வித்தியாலய(காரைநகர் இந்துக்கல்லூரி) வளாகத்திலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மார்கழி விடுமுறைக்காக மூடப்பட்டிருக்கும் பாடசாலை மீண்டும் திறக்கப்படும்போது அவர் ஓய்வு பெற்றுச் சென்றுவிடுவார் என்ற காரணத்தினால் அண்மையில் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களுக்கு கல்லூரி சார்பில் தமது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் உரையாற்றினார்.
பாடசாலை சார்பில் ஆசிரியர் திரு.இராஜமோகன் அவர்கள் கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்கினேஸ்வரன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
![OLYMPUS DIGITAL CAMERA](https://i0.wp.com/www.karainagar.com/pages/wp-content/uploads/2015/12/PC046140.jpg?resize=621%2C466)
OLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA[/caption]