காரை வசந்தம் – 2015 சிறப்பு மலரின் முகப்பு அட்டையினை வடிவமைக்கும் போட்டி

CKCA logo

எதிர்வரும் டிசம்பர் 19ஆம் திகதி நடைபெறவுள்ள காரை வசந்தம் கலை விழாவின் போது வெளியிடப்படவுள்ள காரை வசந்தம் – 2015 என்கின்ற சிறப்பு மலரின் முகப்பு அட்டையினை வர்ணத்தில் வடிவமைப்பு செய்யும் போட்டியினை நடாத்தி மிகச் சிறந்ததாகத் தெரிவு செய்யப்படும் அட்டையினை வடிவமைத்தவருக்கு காரை வசந்த விழாவின் போது பாராட்டு விருது வழங்கி கௌரவிப்பதுடன் அவரது பெயர் விபரங்கள் சிறப்பு மலரில் பதிவு செய்யப்படும்.

போட்டியில் பங்குகொள்வதற்கான நிபந்தனைகள்

காரைநகர் உள்ளிட்ட உலகின் எப்பாகத்தில் வதியும் காரைநகரைச் சேர்ந்தவர்கள் அல்லது அவர்களது வாழ்கைத் துணைகள் அல்லது அவர்களது பிள்ளைகள் அனைவரும் பங்குபற்றமுடியும்.

டிவமைக்கப்படும் அட்டை காரைநகரின் அடையாளங்களாக அமைந்து விளங்கும் பிரதானமான மையங்களையும் வனப்பு மிக்க காட்சிகளையும் வர்ணத்தில் பின்னணியில் கொண்டிருப்பதுடன் 8.5அங்.(அகலம்) X 11.00அங்.(உயரம்) என்ற அளவினைக்கொண்டதாகவும்  இருக்கவேண்டும்.

காரை வசந்தம் – 2015 என அட்டையின் மேற்பகுதியிலும் கீழ்ப்பகுதியில் இடம்பெறும் மன்ற இலட்சினைக்கு நேராக கனடா-காரை கலாசார மன்றம் Canada-Karai Cultural Association   என தமிழிலும் ஆங்கிலத்திலும் பதியப்படுவதுடன் டிசம்பர் 19, 2015 என்ற திகதியும் கூடவே பதியப்படுதல் வேண்டும்.

வடிவமைப்புச் செய்யப்பட்ட அட்டை  karainagar@gmail.com   என்ற மின் அஞ்சல் முகவரிக்கு நொவம்பர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்கப்படுதல்வேண்டும்.

விரும்பின் ஒருவர் ஒன்றிற்கு மேற்பட்ட அட்டைகளையும் வடிவமைத்து அனுப்பமுடியும்.

416-817-8479

 416-267-6999

 647-766-2522 

என்ற தொலைபேசி இலக்கங்களுள் ஒன்றுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

வடிவமைக்கப்பட்ட File PDF அல்லது JPEG வடிவில் அமைந்திருப்பதுடன் Resolution 300DPI ஆகவும் இருத்தல் வேண்டும்.

நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.


நிர்வாகம்,

கனடா-காரை கலாச்சார மன்றம்.